Translate

17 டிசம்பர், 2017

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Kadu malai kadanthu vanthom Ayyappa- K. Veeramani Ayyappa song

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Kadu malai kadanthu vanthom Ayyappa- K. Veeramani Ayyappa song


காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா

காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய‌ (ஐயப்பா)
வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி
வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா)
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே

ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா எங்கள்
பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள்
பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீ
ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா (காடுமலை)

நீலவிழி கண்ணனுக்கும் நீரணிந்த‌ ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த‌ ஐயப்பா ( x 2 )
வேலவனின் அருமைத் தம்பி காலமெல்லாம் உனை வேண்டி
நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா (காடுமலை)

மணிகண்டா உன் கருணை அமுதமப்பா உன்
புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா
மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா x2
சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே (காடுமலை)
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா

Tamil Ayyappan தமிழ் ஐயப்பன் பாடல் வரிகள்: துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்


துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் ஐயப்பன் பாடல் வரிகள். Thulasimani Maalai aninthu Sabarimalai sentriduvom - K. Veeramani Ayyappa song Tamil Lyrics

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்
தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை)

பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே
பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை)

சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து
கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி
குணகரனை அனுதினம் நினைந்து
இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து
பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து
குருவடிவானவன் கருணையை அறிந்து
திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே (துளசிமணி மாலை)

பவள‌ மணித் திருமார்பினிலே பந்தளராஜனின் ஆபரணம்
அவனியெல்லாம் போற்றிடவே அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்
பலவினைகள் நீங்கிடவே பகவான் நாமம் பாடிடுவோம்
நம் கவலையெல்லாம் மறந்திடவே கருணை மழையில் கூடிடுவோம் (துளசிமணி மாலை