Translate

8 ஜனவரி, 2018

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை ஐயப்பன் பாடல் வரிகள். Ayyan Arul Undu Endrum Bayamillai povom Sabarimalai- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை
போவோம் சபரிமலை

அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன்
என்றும் பக்தரைக் காப்பவனே

ஐயப்பா சரணம் ஐயப்பா
அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம்
அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை
ஏறிவந்தோம் (ஐய்யன்)

ஐயப்பா சரணம் ஐயப்பா
பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய்
எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது
மணிகண்ட‌ பெருமானே

பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசா
சந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசா
சபரிமலை நாதா சபரிமலை நாதா (அய்யன்)

கருத்துகள் இல்லை: