Translate

14 ஜனவரி, 2018

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே கே.வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Malairajan Thirukovil Maniyaduthey Ayyappan song Tamil Lyrics சாமி ! வீடியோ பாருங்க‌


மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே ( x 2)
அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே ( x 2)
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே ( x 2)
(மாலைராஜன் )

வாவென்று வரவேற்கும் ஐயன் மலை
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை
நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் ( x 2)
(மாலைராஜன் )

ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே ( x 2)

நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே ( x 2)
(மாலைராஜன் )

நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்
நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்

அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி ( x 2)
(மாலைராஜன் )

1 கருத்து:

Unknown சொன்னது…

பாடுவதற்கு எளிதாக ஒவ்வொரு வரிகளும் பிரித்து எழுதி கொடுக்கவும்